Sunday, December 28, 2014

எளிது எளிது ஆர். ஓ. ஹச் எளிது

எளிது எளிது ஆர். ஓ. ஹச் எளிது

     ஆர்.ஓ.ஹச்- முறையை எளிமையாக கையாள கீழ்கணட மனக்குறிகளைப் பற்றி நாம் அதிகம் விவாதிக்க வேண்டும்.
    
     ஹோமியோபதி மருத்துவத்தில் நாம் அதிகம் பயன்படுத்தும் மனக்குறிகள் DELUSION, DELIRIUM, FEAR,  ANXIETY, ANGUSH, ANSWER, ANGER           மற்றும் GESTURES போன்றவையாகும்.

       இதில் மிகவும் அதிக் அளவில் பயன்படுத்தும் DELUSION மற்றும் FEAR அதிக அளவில் பயன்படுத்தப்படும் குறிகளாகும்.
      
       DELUSION என்பதனை நாம் எளிமையாக துயரரின் ‘எண்ணம்எனற அடிப்படையில் புரிந்து கொண்டால் வெற்றிகள் எளிது.

       DELUSION, Poor he is
            DELUSION, sick imagination of      
            DELUSION wrong has suffered
            Delusion wealth of
            Delusion seized he is
            Delusion, thin is getting
            Delusion, thin she is

என்பனவற்றில் DELUSION என்ற சொல எண்ணம் எனற பொருளில் வைத்துப் பொருள் கொள்ள வேண்டும். அவைகள் முறையே, தான் ஏதோ ஒன்றில் குறைவுற்று இருப்பதாக, தான் நோய்வய்ப்பட்டு இருப்பதாக, தவறாக அவதிப் படுவதாக, தான் நல்ல நிலையில் இருப்பதாக, தன்னால் இயங்க முடியாத நிலையில் இருப்பதாக், தான் மெலிந்து வருவதாக, தான் மெலிந்து இருப்பதாக.......போன்ற எண்ணங்காளால் துயரர் சூழ்ந்தைருப்பதாக நாம் உணரலாம். எனவே Delusion எனபதை மாயை, மனப்பிரமை போன்று பொருள் கொள்ளக் கூடாது. பொதுவாக DELUSION என்பது துயரர் தன் வாயினால் சொல்லுவதாகவே இருக்கும்.

அடுத்தது DELIRIUM
      
       DELIRIUM திடீரென்று ஏற்படும் ஒரு பிறழ்வு நிலை. அது மகிழ்ச்சியானதாகவோ மகிழ்ச்சியற்றதாகவோ இருக்கலாம்.





       DELIRIUM,  crying help for எனபதை அப்படித்தான் எடுத்துக் கொள்ள் வேண்டும். உதவி கேட்டு தன்னை மறந்து கூக்கலிடுகிறார் எனலாம். பரவச நிலை என்றும் DELIRIUM த்திற்கு பொருள் கூறலாம். DELUSION சற்று நிரந்திரமானது. ஆனால் DELIRIUM ரொம்பவும் தற்காலிகம்.

FEAR -  பயம் அபிப்பிராயம், கருது, பக்தி (மரியாதை), சிரத்தை எனப் பொருள் கொள்ளலாம்.

FEAR எதிர்காலம் குறித்து நிகழ்வில் கொள்ளும் அச்சம்.
      
       இங்கு எதிர்காலம் என்பது அடுத்த நிமிடம், ஏன் அடுத்து வினாடியாகக் கூட இருக்கலாம்!

                FEAR, sufferings of என்பதற்கு உதாரணமாக, வாய் முழுவதும் புண் உள்ள துயரர், திறந்தால் வலிக்குமே என்று வாய் திறவாமல் இருப்பதைக் குறிப்பிடலாம். வாயைத் திறந்தால் வலிக்கும் என்பது உடனடி எதிர்காலம்.

                FEAR, betrayed being, ‘தான் ஏமாற்றப்படுவோம் எனற பயம், FEAR, suffocation of  -ல்இரவில் மூச்சுத்தினறல் ஏற்பட்டல் என்ன செய்வதுஎனபது துயரர் மொழியாக இருக்கலாம். அதிகம்பேர் இருக்கும் இடத்திற்கு செல்ல பயம் எனபதும் FEAR, suffocation of  ல் வரும்.


ANXIETY-
       இது மனக் கவலை. ANXIETY, pain about, என்பதில் ‘வலி எதனாலோஎனற கவலை. ANXIETY, others about,  மற்றவர்கள் குறித்த கவலை.


ANGUSH

       இது வருத்தம் வேதனை ---இது உணரப்படுவது.

இதற்கு உதாரணமாக ANGUSH,  stool before, ANGUSH, stormy weather in போன்றவற்றை கூறலாம்.

       மேற்கணடவைகளை நாம் ஆர்.ஓ.ஹ்ச்-சின் பால பாடமாக எடுத்துக் கொள்ளலாம்.

       வரும் இதழ்களில் ANGER,  ANSWERS, GESTURES, SMILING, LAUGHING முதலியவைகளை விரிவாகப் பார்க்கலாம்.

##################


யார் உண்மையான ஹோமியோபதி மருத்துவர்?

யார் உண்மையான ஹோமியோபதி மருத்துவர்?


        யார் உண்மையான ஹோமியோபதி மருத்துவர்?
        ஹோமியோபதி மருத்துவக்கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்றவர்களா? பட்டம் பெறாமல் ஹோமியோபதி மருந்துகளை அனுபவத்தில் தெரிந்து கொண்டு அம்மருந்துகளை துயரருக்கு அளிப்பவர்களா?
         
            ஒருவர்  BHMS, DHMS அல்லது  M.D (Homeo)  என்ற பட்டங்களை பெற்றதினாலோ RHMP போன்ற அரசுப் பதிவு பெற்று விட்டதாலோ அவர் ஹோமியோபதி மருத்துவராகி விட முடியுமா?
            ஆசிரியர் பட்டயம் பெற்றவர்கள் ஆசிசியராகப் பணியாற்ற தகுதி பெற்றவராகப் கருதப்படுகிறது. ஆணால் அத்தகுதி பெற்றவர்களில் மிகச் சிலராலேயே சிறந்த ஆசிரியராக ( கவனிக்கவும் ‘நல்லாசிரியர்’ களாக அல்ல) பரிணமிக்கமுடிகிறது.
         
          அவ்விதமாக தற்போது உலகெங்கிலும் உள்ள ஹோகியோபதி மருத்துவர்களில் ( அல்லது அப்படி சொல்லிக் கொள்பவர்களில்)  மிகக் குறைந்த விழுக்காட்டினரே உண்மையான ஹோமியோபதியராக உள்ளனர்.

          எனது நண்பர் ஒருவர், தனது குழந்தையின் டான்ஸில் பிரச்சனைக்கு ஹோமியோபதி மருத்துவம் பார்த்து வருவதாச் சொன்ன்னர் “........”என்ற ஒரு கம்பனி கூட்டு மருந்து பெயரைச் சொல்லி “அதுதானே சார் டான்ஸிலுக்கு ஹோமியோபதி மருந்து?  என்று கேட்டார். அம்மாதிரி பல கூட்டு மருந்துகளின் பெயர்களையும் அவர் சொன்னார். அதன் மூலம் தனக்கும் ஹோமியோபதி தெரிகிறது என்ற பெருமை அவர் வார்த்தைகளில் கொப்பளித்தது.
          மற்றொரு நபர் ஒரு பத்திரிக்கையில் வெளிவந்த ஹோமியோபதி மருத்துவக்குறிப்பைப் பார்த்து அவருடைய மூலநோய்க்கு மருந்து சாப்பிட்டதாகவும், ஆனால் குணம் ஏதும் தெரியவில்லை என்றும் அதனால் ஹோமியோபதி மருந்துகள் சரியாக வேலை செயாது என்றும் தனது  கருத்துக்களைத் தெரிவித்தார்.
          ஒரு வயதான மருத்துவர் (RHMP மற்றும் RAMP ஆகிய இரு பதிவுகளை வைத்திருப்பவர்) ஹோமியோபதியுடன் ஆயுர்வேதா, சித்தா மருந்துகளியும் சேர்த்துக் கொடுப்பதால் மட்டுமே ஓரளவு பலன் கிடைக்கிறது என்றும், அத்துடன் அல்லோபதியையும் சேர்த்துக் கொடுப்பதினால் சிறந்த பலன் கிடைக்கிறது” என்றும் தனது அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.
        மற்றொரு மருத்துவர்,  “ஹோமியோபதி மருந்துகளி தினமும் 6 வேளை உட்கொள்ளவேண்டும் என்றும் அதுவும் உயர் வீர்யங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் எனக்கு அறிவுரை கூறினார்.
        ”நான் எப்போது பயன்படுத்துவது ..........கூந்தல் தைலம்தான்....அது ஹோமியோபதி மருத்துவ முறையில் தயாரிக்கப்பட்டதுதானே? என்று வினவும் அப்பாவிகளும் உண்டு.
        “சித்த ஆயுர்வேத மருந்துகளுக்கும் அல்லோபதி மருந்துகளுக்கு இடைப்பட்ட வடிவ வேற்றுமை  பல ஆண்டுகளுக்கு முன்பே ஒழிக்கப்பட்டு விட்டது. அம்மருந்துகள் யாவும், அல்லோபதி மருந்துகள் போலவே மாத்திரைகள், கேப்சூள்கள், டாணிக்குகள், சிரப்புகள், லோஷன்கள் ,ஆயின்மெண்ட்டுகல் மற்றும் மூச்சிசிழுப்பான்கள் ( inhalers)  வடிவங்களில் கிடைக்கின்றன. தற்போது எந்த ஒரு சித்த மருத்துவரும் தனது சிந்தூரஙகள், பற்பங்கள் மற்றும் சூரணங்களை சிறிய மெழுகுத்தாட்களில் மடித்துத் தருவதில்லை!  எல்லாம் கேப்சூல் வடிவமாகவும் மாத்திரைகள் வடிவிலும் கவர்ச்சிகரமான பாட்டில்களில் அடைத்து விற்பனை செயாப்படுகின்றன.
        ஆனால் ஹோமியோபதி மருத்துவர்கள் மட்டும் தற்போதுகூட சிறிய கடுகு வடிவ மாத்தைரைகளைப் பயன்படுத்திவருவது அவர்களுக்குள் ஏதோ ஒரு தாழ்வுமன்ப்பான்மையை ஏற்படுத்தி விடுவதாகக் கொள்ளலாம். அதற்காகக் கூட வர்கள் கடுகு வடி மருந்துகள் கூடவே கூட்டு மருந்துகளையும் பயோ கெமிக்கல்  (உயிர்வேதி) மருந்துகளையும் பயன்படுத்தை வருவதாகத் தெரிகிறது.

            மேற்குறிப்பிட்ட எந்த முறையும் உண்மை ஹோமியோபதி ஆகாது. 

        பின்பு எதுதான் உண்மையான ஹோமியோபதி மருத்துவம்?

            இதற்கான விடைதன் விவாதத்திற்கு உரியதாகிவிடுகிறது.
       
THE SCOPE OF HOMOEOPATHY  BEGINSWHERE THE SCOPE OF OTHER SCIENCES ENDS
_ Dr. Prafull Vijayakar
மாமேதை ஹானிமன் ஆர்கனான்
 மணிமொழி 1  ல்  “ நம்மிடம் சிகிச்சை பெற  வருகிறவர்களின் நோய்களை வேறுடன் களைந்து, மீண்டும் வராதபடி நோயற வாழ செய்வது ஒண்றே வைத்தியரின் உயர்ந்த கடமையாகும்..” என்கிறார்.

மணிமோழி 2  ல்  “ நோயற்ற நிலை விரைவில் ஏற்பட வேண்டும், நோயாளிக்கு எவ்வகையான துன்பமும் நேரக் கூடாது. நோய் மீண்டும் திரும்பி வராமல் வேருடன் வீழ்த்திட வேண்டும். முற்றிலும் நம்பத் தகுந்த  எள் அளவுத் தீங்கையும் உண்டாக்காத, எளிதிலே புரிந்து கொள்ளக் கூடிய  வழி முறைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்...”  என்கிறார்.

உண்மையான ஹோமியோபதியர்கள் யாரும், ஹோமியோபதி கூட்டு மருந்துகளையோ, ஹோமியோபதி ஆயிண்ட்மெண்ட்களையோ (!) , அவசரத்திற்கு அலோபதி மருந்துகளையோ, பயோ கூட்டு மருந்துகளையோ, சித்த, ஆயுர்வேத மருந்துகளையோ தாம் கொடுக்கும் ஹோமியோபதி மருந்துகளுடன் பரிந்துரை செய மாட்டர்.  அவர்களுக்கு ஹானிமானின் மேற்சொன்ன இரண்டு மணிமொழிகளும் வேதம். அதனை மீறி அவர்களால் எண்ணவும் முடியாது.  அவர்கள், “ ஒரே மருந்து, குறைந்த அளவு மருந்து என்பதில் மிகுந்த நம்பிக்கை உடையவர்கள்.  அதன் மூலமே மிகச் சரியான குணமாக்களை நிகழ்த்திவிடுவர்.

சில உதாரணங்கள்:

எனது ஹோமியோபதி மருத்துவ நண்பரின் உறவினர் தலைப் பிரசவத்திற்காக ஒரு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார். பிரசவ நாளாகியும் குழந்தை திரும்பவில்லை, கொடி சுற்றியுள்ளது என மருத்துவர்கள் சிசேரியனுக்கு ஏற்பாடு செய்கிறார்கள். அப்பெண்ணின் தாயாரிடம், நமது நண்பர், இதுபோன்ற நிலைகளில் பெண்ணுக்குக் கொடுக்கச் சொல்லி பல்சடிலா - 200 ல்  இரண்டு பொட்டலங்களை கைவசம் கொடுத்தனுபியிருந்தார். ஆனாலும் அந்த அம்மாவிற்கு பெண்னை அம் மருத்துவ மனையின் மேல் தளத்த்தில் உள்ள ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்லும் வரை ஹோமியோபதி நினைப்பு வரவில்லை.  அவர் தன்ன்னிடம் இருந்த மருந்தின் நினைப்பு இல்லாமல் நண்பருக்கு போன் செய்து நிலைமையை விவரித்துள்ளார். நண்பர் தான் கொடுத்தனுப்பிய மருந்துகளை கொடுத்தீர்களா என வினவ, அப்போதுதான் அந்த அம்மவிற்கு தன்ன்னிடம் உள்ள ஹோமியொபதி மருந்து நினைவிற்க்கு வந்துள்ளது. உடணே எப்படியாவது அதனை பிரசவ அறையில் உள்ளே இருக்கும் தனது மகளிடம் கொடுத்துவிடுவதாக செல்லி, டாக்டரிடம், தனது குலதெய்வ சாமியின் திருநீறு நெற்றியில் தரிப்பதற்கு, ஆபரேஷன் தியேட்டர் உள்ளே செல்ல அனுமதி பெற்றுள்ளார்.

அதற்குள், மயக்க மருந்து நிபுனர் பெண்ணிற்கு மயக்க மருந்து செலுத்தி, அவர் மயக்கமடைந்துள்ளார். அறுவை சிகிச்சை நிபுனர் கீழ்தளத்திலிருந்து சிசேரியன் செய்வதற்கு கிளம்பிவிட்டார். இவ்விடைப்பட்ட நேரத்தில்     பல்சடில்லா 200  அப்பெண்ணுக்கு அளிக்கப்பட்டது.

அறுவை சிகிச்சை நிபுனர் ஆபரேஷன் அறைக்குள் நுழைகிறார். அப்போதுதான் அவ்வதிசயம் நிகழ்கிறது.  குழந்தை சரியான நிலையில் வெளியே வருகிறது.  சுகப்பிரசவம் !!!
அங்கிருந்த மருத்துவர்கள் ஆச்சரியம் அடைகின்றனர்.
“இவ்வாறு நிகழ சாத்தியமே இல்லையே..!!!என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்கின்றனர்.

சில நிமிடங்களில் ஹோமியோபதி அதன் ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளது. ஹோமியோபதி த்விர வேறு எந்த மருத்துவத்திலும் நிகழாத அற்புதம் இது.

மற்றொரு உதாரணமாக அதே நண்பர், வேறு ஒரு பெண்ணிற்கு பிரசவ நாள் கடந்தும், ”வலியே இல்லை...” என்று கூறியவருக்கு ஓப்பியம் 30 ஒரே வேளை தந்து சுகப்பிரசவம் ஆன அனுபத்தையும் எம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

எனவே சரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஹோமியோபதி மருந்து அதன் குணமாக்கலை நிகழ்தாமல் விடுவதில்லை.

உண்மையான ஹோமியொபதியர் ஒற்றை மருந்தைத் தவிர வேரேதும் கொடுப்பதிலை.

உண்மை ஹோமியோபதியை நம்புவோம்....வெற்றி நமதே!!!!
.          


##################
           

           




Ready Reckoner 1

அட நம்ம ரஸ்டாக்ஸ்தாங்க...!
17.11.14
            துயரர் எனக்கு மிகவும் அறிமுகமாவர்.  பொது நல அமைப்பில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்.  அந்த அமைப்பின் சார்பில் மாநில அளவிலான முகாம் ஒன்றை ஏற்பாடு செய்வது குறித்து என்னுடன் ஆலோசித்துக் கொண்டிருக்கும் போது,
            ” கிட்டத்தட்ட ஒரு வாரமா நாளா சளியாக இருக்கு(1)...... ஃபிரீயாவே இருக்க முடியல....மருந்து கொடுங்க....19 ஆம் தேதிக்குள்ள சரியாயிடனும்(2)........”  என்றார்.
            நான் மருந்து தேர்வு செய்து கொடுத்துவிட்டு, அவருடன் முகாம் செய்திகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தேன். 
            சிறிது நேரத்தில்... “ சார்... என்ன மருந்து கொடுத்தீங்க....?....உள்ளுக்குள்ள ஏதோ கரையிற மாதிரி இருக்கு....நல்லா ரிலீஃபா இருக்குங்குக.....”என்றார்.
*         *        *         *        *         *          *
மீண்டும் அவரை நான் சந்தித்த போது,...’கீழ் முதுகுல லேசா வலி இருக்குங்க....” என்றார். ”யூரின் எப்படிப் போகுது......?”  என்று கேட்டேன் நான்.  “ நீங்க மருந்து கொடுத்த மறுநாள் கருப்பா ரெண்டு தரம் போச்சுங்க.... இப்ப நார்மலா இருக்கு...” என்றார். ”அப்படியா...நான் கொடுத்த மருந்தை மட்டும் (SL)சாப்பிடுங்க...இந்த முதுகுவலியும் சரியாயிடும்.....” என்று அவருக்கு சொல்லி மீண்டும் இரு நாட்கள் கழித்து அவரிடம் விசாரித்த்தில்....”ஒரு தொந்திரவும் இல்லை.....நன்றாக இருக்கிறேன்...” என்ற பதில் வந்தது.
தேர்ந்தெடுக்கப்பட்ட குறிமொழிகள்:  (1)DELUSION, Injury, injured is being,
                                                  (2) CARRIED, Desire to be fast.
மருந்து......? அட நம்ம ரஸ்டாக்ஸ்   தாங்க...!
மேலிரண்டு குறிமொழிகளும் நாம் அடிக்கடி கணும் துயர் மொழிகள்: ரஸ்டாக்ஸ் 30 மேற்கண்ட துயர்ரை எளிமையாகவும், முழுமையாகவும் குணமாக்கியுள்ளது.  முதுகில் ஏற்பட்ட வலி, கருப்பான சிறுநீர் ஆகியவை கழிவு நீக்கமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. துயரர் இந்நாள் வரை நலம்.
            இப்படிப்பட்ட Acute  நிலைகளில் Ready Reckoner போன்று குறிமொழிகளையும் மருந்துகளையும் இணைத்து நாம் குறிப்புகளை வைத்துக் கொண்டால் வெற்றிகள் நமதே.



Friday, December 26, 2014

R.O.H –ஐ புரிந்து கொள்வோம்


R.O.H –ஐ புரிந்து கொள்வோம்


     அமரர் டாக்டர் S.P. விக்டர் அவர்களின் பெருமுயற்சியால் Dr.M.L. சேகல் அவர்கள் கண்டுபிடித்த R.O.H முறை தமிழ்நாட்டில் வேரூன்றி நன்கு பரவியுள்ளதை நாம் மறுக்க முடியாது. தற்போதும் அவரது சீடர்கள் R.O.H ஐ தங்களால் இயன்ற அளவு பரப்பவும் போதிக்கவும் முயற்சிகள் செய்து வருவது பாராட்டுக்குறியது.

      எந்த ஒரு துறையிலும் அதன் வீச்சையும் ஆழத்தையும் முழுமையாகப் புரிந்து கொண்டாலன்றி அதில் வெற்றிபெறுவது இயலாது. அவ்வாறு புரிந்து கொண்டவர்களுக்கு அக்குறிப்பிட்ட பணி மிக எளிதாகிறது.

      உதாரணமாக கணிதத்தில் ‘இயற்கணிதம்(ALGEBRA) எனற் பாடப்பிரிவை அனைவரும் அறிவோம். அதன் அடிப்படைகளை புரிந்து கொண்டவர்களுக்கு இயற்கணித்தைப் போன்று எளிய கணக்குப் பிரிவு எதுவும் இல்லை. ஆனால் அப்படிப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு அதனைக்காட்டிலும்  கடினம் எதுவும் இல்லை. அப்படிப்பட்டவர்கள் அதை தவிர்க்கவும் செய்வர்.

      ஹோமியோபதியை (CLASSICAL) முறையாகக் கற்கும் வழி என்ன என்று ஓர் உண்மை ஹோமியோபதியரிடம் கேட்டால், முதலில் தத்துவதைப் (ஆர்கன்னன்) படி என்பர். பின்பு மெட்டீரியா மெடிக்கா அதன் பின்பு ரெப்படரி வகைறாக்களை படிக்க அறிவுறுத்துவர்.

      R.O.H -முறையிலும் அதற்கு விதிவிலகல்ல. முதலில் நாம் தத்துவங்களைத்தான் படிக்க வேண்டும்.  ஆங்கிலம் தெரிந்தவர்கள் Dr.M.L. சேகல் அவர்களின்  R.O.H  வரிசை 1,1A, மரRறும் 2 ஐ அவசியம் படிக்க வேண்டும்

      R.O.H என்றதுமே பலரும் நினைப்பது மனக்குறிகளை மட்டும் பயன்படுத்தி மருந்து தேர்வு செயதல் என்பதே. அது மிகவும் தவறான கருத்தாகும்.

      R.O.H -ல் மனக்குறிகளை எடுத்துக் கொள்வதில்லை; மனநிலைகளை எடுத்துக்கொண்டு மருந்தளிக்கப்படுகிறது. என்பதை அடிப்படை விஷயமாக புரிந்து கொள்ள வேண்டும்.

      மனக்குறிகளுக்கும் மனநிலைக்கும் என்ன வித்தியாசம்?

              மனக்குறிகள் ஒரு மனிதரிடத்தில் எப்போதும் உள்ளவை. மனநிலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் காணப்படுபவை.

       எடுத்துக்காட்டாக ஒருவர் ‘சிடுமூஞ்சிஎன்று பெயரெடுப்பது அவரது மனக்குறியைக் காட்டுகிறது. “சளி பிடித்தால் சிடுமூஞ்சித்தனம்என்பது மன நிலை. அதாவது அவர் சளி பிடித்திருக்கும்போது மட்டும் ‘சிடுமூஞ்சியாக மறியிருகிறார். அவர் சாதாரணமாக அப்படி இருப்பதில்லை. ஆனால் முதலாமானவர் சுபாவமே ‘சிடுமூஞ்சித்தனம்அது அவரது இயல்பு. மாற்றுவது கடினம்.

      ஒருவரது உடல்நலக் குறிவினால் அவரது இயல்பான மனநிலை மாறிவிடுகிறது. அல்லது வெளிக்காரணங்களால் மனநிலையில் மாறுதல் வரும் போது உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. என்றுகூடச் சொல்லாம். அத்தகைய மனநிலைகளை அடையாளங்கண்டு மருந்தளித்து குணமாக்குவதே  Hit the Right Target”

                அந்நிலைகளே நிலைத்த. நீடித்து, நிலையாதிக்கம் (P.P.P) செyவதாக உள்ள “மனநிலைகள்”. அம்மன நிலையை அவருடைய வார்த்தைகள் செய்கைகள் மூலமாக நாம் அறிந்து அதை ரெபரட்டரி மொழியாக மாற்றம் செய்வதில்தான் நமது திறமை அடங்கியுள்ளது.

                நமது நண்பர் ஒருவர் இயல்பில் கருமியாகவோ அல்லது ஊதாரியாகவோ இருக்கிறார். அவருக்கு உடல்நலக் குறைவுக்கு நாம் மருந்தளிக்க வேண்டும்போது அவர் ‘கருமி அல்லது ‘ஊதாரிஎனபதை மனதில் வைத்துக் கொண்டு மனக்குறிகளுக்கேற்ற மருந்தளிக்க முற்பட்டால் நாம் தோல்வியயைத்தான் தழுவுவோம். அம்முறை  ROH ஆகாது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

      கருமியான நம் நண்பர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு  “எப்படியாவது சரி செய்யுங்கள்....நான் குணமாக வேண்டும்....நான் எதைப் பற்றியும் கவலைப் படவிலை(பணத்தைப் பற்றிக்கூட)...... என்று கூறுவதுதான் அப்போதைய அவரது மனநிலை.

      இங்கு  Praying , Mood repulsive, போன்ற குறிமொழிகளை நாம் தேர்வு செய்து மருந்தளிப்பதின் மூலமே அந்நண்பரது உடல் நலமாகும்.

      வெறொரு நண்பர் இயல்பில் ‘ஊதாரியாக’, அதிகம்  செலவு செய்பவராக இருக்காலாம். ஆனாலும் அவரக்கு மருந்தளிக்க வேண்டியிருக்கும்போது “இப்படி எத்தனை நாளைக்குத்தான் மருந்து சாப்பிடுவது,, என்று சொல்வது அவரின் அப்போதைய மன நிலை வெளிப்பாடாக எடுத்துக் கொண்டு Fear. Extravagance of “ என்ற குறிச்சொல்லோடுதான் நாம் பொருத்திப் பார்க்க வேண்டும்.
      ஆனால் நோயுறும்போது எப்போதுமே ஒருவருடைய மனக்குறிகளுக்கு எதிராகவே அவரது மனநிலை அமையும் என்று நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒருவரின் பொதுவான சுபாவத்திற்கும் அவரது அவ்வப்போதய மன்நிலைக்கும் உடனடியாகத் தொடர்புப் படுத்தக் கூடாது, அது  ROH  அல்ல என்பதே நாம் இங்கு புரிந்து கொள்ள வேண்டியது.

      எனவே ROH  மருத்துவர்களின் வெற்றி அவர்கள், நோயாளிகளின் அப்போதைய மனநிலைகளைப் புரிந்து கொள்வதில்தான் உள்ளது.

      எனவே டாக்டர் ராஜன் சங்கரன், டாக்டர் அமர். டி. நிகாம், டாக்டர். பிரபுல் விவிஜயகர் போண்றவர்களின் முறைகளோடு ROH  முறையை குழப்பிக் கொள்வது ஆபத்தில்தன் முடியும்.

      உண்மையான ஹோமியோபதியராக இருப்போம். தெளிவாக R.O.H ஐ பின்பற்றுவோம்.