Friday, September 22, 2017

ஆர். ஓ. ஹச். முறையில் வீரியத் தேர்வு

ஆர். ஓ. ஹச். முறையில் வீரியத் தேர்வு

            ஹோமியோபதியில் மருந்து நிர்ணயம் செயும் முறை எத்தனை முக்கியமானதோ, அதே அளவு முக்கியத்துவம் பெற்றது வீரியத் தேர்வு. தொல்சீர் ஹோமியோபதியில் (Classical Homoeopathy) வீரியத்தேர்வு செய்யும் முறையை பலரும் விளக்கியுள்ளனர்.   Dr. ஸ்டூவட் க்ளோஸ் அவர்களின் The Genius of Homoeopathy  புத்தகத்தில், மருந்தின் அளவு (POSOLOGY) குறித்த மிகத் தெளிவாகவே விளக்கப்பட்டுள்ளது. அதனையே பல தொல் சீர்முறையில் ஹோமியோபதியர்களும் பின்பற்றுவதாகவே தெரிகிறது.

            ஆனால் R.O.H. முறையில் மருந்து தேர்வு குறித்து, மரு சேகல் அவர்கள் மிக அருமையான முறைகளை அறிவித்துள்ளார். மரு. சேகல் அவர்களின் ஆரம்ப புத்தகங்களில் 30C  வீரியத்தை உகந்த (Optimum)  வீரியமாகக் கருதியிருக்கிறார். என்றாலும் அவரது இறுதி கால நூல்களில்    (ROH series viii) 6C மற்றும் 3X வீரிய மருந்துகளே நோயை அதிகப்படுத்தாமல் (Disease aggravation) மாமேதை ஹானிமன் குறிப்பிட்ட ‘மென்மையான நலமாக்கலை’ ஏற்படுத்துவதாக எழுதுகிறார். மேலும் இவ்வகையில் மருந்தளிப்பதால் ROH முறைக்கே உரியதான, இயற்கையான நோய்க்கழிவு வெளியேற்றம் (Second Action) அதிகம்  துன்பப்படுத்துவதாக இல்லை என்றும் அறிவித்துள்ளார்.

ROH முறையை பின்பற்றி மிகச்சிறப்பாக குணமாக்கலை நிகழ்த்தி வரும் வட இந்திய மூத்த மருத்துவர் P.P. மல்ஹோத்ரா ஐயா அவர்கள், துயரருக்கேற சரியான மனநிலையை தேர்வு செய்து 1M  வீரியமே கொடுத்து வெற்றி பெருகிறார். என்றாலும் மரு. M.L.  சேகல் அவர்களின் புதல்வர்கள், தங்களின் புத்தகங்களில் உயர் வீரிய மருந்துகள் கொடுத்து, அதன் விளைவுகள் அந்த அளவுக்கு நம்பிக்கை அளிப்பதாக இல்லை என்றே குறிப்பிடுகின்றனர்.
நாம் பயன்படுத்தும் வீரியத் தேர்வு முறைகளை, (பல மூத்த ROH மருத்துவர்கள் பின்பற்றுவது) கீழ் கண்டவாறு அமைத்துள்ளோம். பின்பற்றிப் பார்த்து ஏற்றுக் கொள்ளலாம். (”எல்லாவற்றையும் சோதித்துப் பார்…. எது சரியானதோ அதனை கெட்டியக பற்றிக் கொள்” – இ.பி. நாஷ், லைக்கோபோடியம் மருந்தைப் பற்றி எழுதும்போது!)

வீரியத் தேர்வு
1.    துயரர் – துன்பத்தை வேதனையை மையப்படுத்தினால் – குறைந்த வீர்யம் (3,6,3x,6x)
2.    வாழ்வாதாரத்தை மையப்படுத்தினால் – மத்திம வீர்யம்(30,200)
3.    தனித்துவத்தை மையப்படுத்தினால் – உயர் வீரியம்(1M.10M)

எடுத்துக்காட்டாக: ஒரு துயரர் தனது முழங்கால் வலி என்ற தொந்தரவுக்காக நம்மிடம் வருகிறார் என வைத்துக் கொள்வோம்.
1 அவர் தனது உரையாடலில் தனது கால் வலியை மட்டுமே அதிகம் குறிப்பிட்டால். அவர் தனது வேதனையை மட்டுமே மையப்படுத்துகிறார். எனவே தேர்ந்தெடுக்கப்பட்ட  மருந்தின் குறைந்த வீர்யம் 3, 6, 6x போன்றவை முதலில் (First Prescription) கொடுக்கப்பட வேண்டும்.
2. அவர் தனது கால் வலி குறித்தும், அது தொடர்ந்தால் தன்னால் தொடர்ந்து வேலை செய்ய முடியாது போகலாம் என்பது போலவோ, கால் வலியினால் தனது  அன்றாட செயல்கள் செய்ய முடியாது போய் விடுகிறது என்பதை அவரது உரையாடல் மையப்படுத்தினால் அது வாழ்வாதாரத்தை குறிப்பிடுகின்றது. எனவெ மத்திம வீர்யம்             ( 30, 200) கொடுக்கப்பட வேண்டும்
3. அவர் தனது கால் வலியினால், தமது நடையில் மாற்றம் இருப்பதாகவும், அதனால் சமூகத்தில் தாம் வேறு விதமாகப் பார்கப்படுவதாகவும், அல்லது தனது சமூக அந்தஸ்த்து குறைந்து போகலாம் – போன்ற உணவு நிலையில் இருந்தால்  அது அவரது தனித்துவத்தை வெளிப்படுத்துகிறது. எனவெ உயர் வீரியம் (1M, 10M)  கொடுக்கப்படலாம்.
மேற்கண்ட  குறிப்புகள் ஆலோசனைகளாக, ஆய்வுக் கருத்தாக மட்டுமே எடுத்துக் கொள்ளப்படல் வேண்டும். தயவு செய்து யாரும் இதனை முடிபுகளாக கருத வேண்டாம்.

$$$$$$$$$$$$$$$$$$$$$

ஹோமியோபதி பெருமைப்பட்ட நாள்!!

ஹோமியோபதி பெறுமைப் பட்ட நாள்!

     நோபல் பரிசு பெறுவதற்கு மிகப் பெரிய போட்டி இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு யாருக்கு கிடைக்கிறது என்பதில்  அதீத எதிர்பார்ப்பு இருக்கும். இறுதியில் அப்பரிசினைப் பெற்றோரை உலகம் பல வகையிலும் பாராட்டும். அவர்களைச் சான்றோர் பெருமைப்படுத்துவர். அவ்வாறே திரைப்பட உலகில் ஆஸ்கார் பரிசும். இவ்வாண்டு எந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் பரிசு கிடக்க இருக்கிறது என்பதில் பலவித ஊகங்களும், ஆர்வமும் திரைத்துறையில் ஆர்வம் உள்ளோருக்கு இருக்கும்.

     அவ்விதமே, தஞ்சையில் டாக்டர் ஹானிமன் விருது யாருக்குக் கிடைக்கப்போகிறது என்ற அவா, எதிர்ப்பார்ப்பு தமிழக ஹோமியோபதியர்களிடையே இனி வரும் காலங்களில் நிலவப் போகிறது.!

ஆம்… 16.04.2017 ஹோமியோபதி தன்னைப் பெருமைப் படுத்திக்கொண்ட நாள். அந்நாளில்தான் தமிழ்கூறும் நல்லுலகின் மிக முக்கிய, மூத்த ஹோமியோபதி மருத்துவ மேதைகளுக்கு  டாக்டர் ஹானிமன் விருது வழங்கப்பட்ட நாள். முதன் முதல் ஏற்படுத்தப்பட்டு அம்மேதைகளுக்கு அவ்விருது வழங்கப்பட்டதன் மூலம் தனக்கு பெருமை சேர்த்துக்கொண்டது விருது!

விருதென்றால்,வெறும் பட்டயக் காகிதம் அல்ல. மாமேதை ஹானிமன் இலச்சினை பொறிக்கப்பட்ட அரைச் சவரன் தங்க மோதிரமும், அம்மேதையின் உருவம் பட்டொளி வீசும் கேடயமும், பொன்னாடையும்!! விருதுகளை பெற்றுக்கொண்ட ஹோமியோபதியின் வைரங்கள் திருவாளர்கள் கோவையைச் சேர்ந்த மருத்துவர் கி. அம்பலவாணன் ஐயா அவர்களும், பட்டுக்கோட்டை மருத்துவர் ச. சம்பத்குமார் ஐயா அவர்களும்.
விருதினை வழங்க ஏற்பாடு செய்தவர், UHRA நிறுவனர் தஞ்சாவூர் திரு. க அரங்கராசன் அவர்கள்.

உலகமே இரண்டுபட்டுக் கிடக்கிறது. தற்போதய மத்திய அரசாங்கம் செய்வது சரியென்றும், அது மிகப்பெரிய குழப்பத்தில் இருக்கிறது என்றும் விவாதிப்பவர்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாதீர்கள். முதலமைச்சர் நோய்வாய்ப்பட்டு இறந்தாரா இல்லை கொலை செய்யப்பட்டாரா என்ற விவாதங்களினால் ஆகப்போவதென்ன? இவை எல்லாம் அற்ப விவாதங்கள். நாகரீக உலகில், ஒன்றுபடவே இயலாதவாறு உண்மையிலேயே பிளவுபட்டு நிற்பவர்கள், ஹோமியோபதியின் நோய்தீர்க்கும் ஆற்றலை நம்புபவர்கள் மற்றும் நம்பாதவர்கள். ஹோமியோபதியை எதிர்ப்பவர்களை பொறுத்தமட்டில், ஹோமியோபதி ஒரு போலியான மருத்துவ முட்டாள்தனம்.

அனால் ஹோமியோபதியை ஆதரிப்பவர்களைப் பொறுத்தவரையில், ஹோமியோபதி முலம் உலகின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம். அது உடல் ரீதியான துயரமாக மட்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை, சமூகம் சார்ந்த பிரச்சனைகளோ, அரசியல் அலங்கோலங்கலோ ஏன் காஷ்மீர் குழப்பங்களைக்கூட ஹோமியோபதி தீர்த்து வைக்கும் என்ற தீவிர நம்பிக்கையில் உள்ளவர்கள் அவர்கள். தனி ஒரு மனிதனாக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, அரங்கத்தினை அமர்த்தி;, அழைப்பிதழ் அனுப்பி; வந்துள்ளோர்க்கெல்லாம் சிற்றுண்டியியும்; மதிய உணவையும் வழங்கி…..அப்பப்பா…..மிகச்சிறப்பாக இவ்விருது வழங்கும் நிகழ்ச்சியை வடிவமைத்த திரு. க. அரங்கராசன் அவர்களும் இவ்வகையில் ஒரு ஹோமியோபதி தீவிரவாதியே! அவர் அவ்வப்போது இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவது அவருக்கு ஹோமியோபதியின்பால் ஏற்பட்ட அளவிடற்கரிய பற்றையும். அவரின் தன்னலமற்ற சேவை மனப்பன்மையும் வெளிப்படுத்துகிறது.

காலை சுமார் 11 மணி வாக்கில் விழா தஞ்சாவூர் பெசண்ட் அரங்கத்திலே Dr. சாமுவேல் ஹானிமன் அவர்களின் 262வது பிறந்த நாள் மற்றும் ஓமியோபதி வளர்ச்சிக்கு தொண்டு செய்தவர்களுக்கு விருது வழங்கும் விழா தொடங்கியது. விழாவிற்கு தஞ்சாவூர் உயிராற்றல் ஹோமியோ மருத்துவமனை மருத்துவர் திருமதி. Dr. P. மனோபாலா,. BHMS., அவர்கள் தலைமை தாங்கினார். Dr. S மகாலட்சுமி, BHMS அவர்கள் முன்னிலை வகித்தார். உடலியக்கம் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த திரு மு. முகமதுஅலி ஜின்னா அவர்கள் வரவேற்புரை நல்கினார்.

திருச்சி மனிதம் இயக்குனர் மரு. டி. சிவானந்தம் அவர்கள் தனது கருதுரையில், ”மரு—உரு” தந்து மருத்துவமானது இன்று ’மரித்து’வமாக கொடியோர்களின் கைகளில் சீரழியும் நிலையை விளக்கினார். தடுப்பூசிகள் மூலம் இன்னும் சில வருடங்களில் மக்கள் தொகை குறைப்பை ஏற்படுத்தும் வழிமுறைகளை பன்னாட்டு நிறுவனங்கள் மேற்கொண்டுவரும் அதிர்ச்சி தகவலை கூறினார். இனி மனிதவளம் தேவையில்லை, அதனால் உலகில் சுற்றுச் சூழல்தான் மாசு அடைகிறது; இயந்திரங்கள் போதுமானவை, ஏழு மனிதனில் ஒருவன் இருந்தால் போதுமானது, எனவே எதிர்காலத்தில் ஆண்களுக்கு விந்தணுக்கள் இல்லாமலும், பெண்களின் கருப்பை கர்பத்தை தாங்க இயலாததாகவும்,  தவறிப் பிறக்கும் குழந்தைகளும் நோய் எதிர்ப்பு சக்தியற்று விரைவில் மாண்டுப் போவதற்காகவும் பண முதலைகளால் கேடுகெட்ட அரசியல்வாதிகளின் துணையுடன் செயல்படுத்தப்பட்டு வருவதுதான் தடுப்பூசி திட்டங்கள் என்ற விபரங்களைக் கேட்டவர் அனைவரும் திகைப்பில் உரைந்து போயினர். அத்தகைய சூழ்ச்சிகளை முறியடிக்க ஹோமியோபதி ஒன்றே வழியாக இருக்கும் என்ற உணமையினையும் அவர் விளக்கினார்.

திருச்சியைச் சார்ந்த மரு. பி. ஸ்டெல்லா அவர்கள், இரு சிறுநீரகங்களும் பழுதடைந்த நிலையில் பிறந்த குழந்தைக்கு மரு. கி. அம்பலவாணன், அவர்களின் மருந்துகாண் ஏட்டின் மூலம் பிளம்பம் மெட்டாலிகம் என்ற ஹோமியோபதி மருந்தை தேர்வு செய்து கொடுத்து பூரண குணமடைந்த அனுபவத்தை தனது அழகான பேச்சினால் விவரித்தார். மரு. பி. மீனாட்சிசுந்தரம் ஐயா அவர்கள், ஆர்கனான் மணிமொழிகளை விரிவாகவும் கவி நயத்துடன் விளக்கினார்.. மயிலாடுதுறை மரு. ஏ.ஆர். வீரராகவன் அவர்கள் விருது பெறும் பெருமகன்களின் சிறப்புகளைப் பட்டியலிட்டார்.

ஏற்புரையில் மரு. சம்பத்குமார் ஐயா அவர்கள், தனது ஹோமியோபதி அனுபவங்களை நினைவு கூர்ந்தார். நிறைவாகவும்—நிறைவாகவும்! உறையாற்றிய மரு. அம்பலவாணன் ஐயா அவர்கள், ”இந்நாள் என் வாழ்வின் மறக்க முடியாத இனிய நாள்” என்றும், ஹோமியோபதி தெரிந்தவர்களை நான் ஹானிமனாகவே பார்க்கிறேன்  என்றும் கூறி மெய்சிலிர்க்க வைத்தார். உயிராற்றல் குறித்த அவரது அன்றய பதிவுகள் மிக முக்கியமானவை. ஒவ்வொரு ஹோமியோபதியரும் அறிந்து கொள்ள வேண்டியவை. அவர் தனது தொண்டை நோவுக்கு பச்சை மிளகாய் (காப்ஸிகம்) எப்படி மருந்தாகியது என்பதை சுவைபட தந்து தனது உரைக்கு சுவாரஸியம் ஊட்டினார். ஆடிஸம் குறைபாடுடைய ஒரு குழந்தைக்கு, அய்யா அவர்கள் மருந்தளித்து அச்சிறுவன் எவ்வாறு தற்போது மற்றக் குழந்தைகள்  போலவே அன்றாட செயல்களைச் செய்கிறான், அதற்கும் மேலே அவனது அறிவுக்கூர்மை, எந்த வருடத்தின் நாள் சொன்னாலும் உடனே அதன் கிழமை சொல்லும் திறமை, யோகக்கலையின் அச்சிறுவனின் அலாதியான் ஈடுபாடு (சுமார் ஐந்து யோகா நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் நிகழ்த்தியுள்ளான்!) அவனது பாக்ஸிங் திறமை போன்றவைகளை அச்சிறுவனும் அவன் குடும்பத்தாருடன் சென்னையிலிருந்து நேரில் வந்து நிரூபித்தனர். பற்பல கருத்துக்கள், சுவையான செய்திகள்…. நேரம் கருதி அவர் தனது உரையை விரைவாக முடித்தது அனைவருக்கும் சிறிது வருத்தமான விஷயமே.

மரு. கி, அம்பலவாணன் அவர்களால் எழுதப்பட்ட ஆர்கனான் புத்தகம் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது என்று ஐயா அவர்கள் தனது உரையின் இடையே குறிப்பிட்டது தமிழ்நாட்டு ஹோமியோபதியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செய்தி. (நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட நூல்).

திரு. வி. எஸ். பீர்முகமது நன்றியுரை வழங்க, கலந்துகொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் மதிய உணவு வயிரார வழங்கப்பட்டது. அவ்விழாவில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் மறக்க முடியாத இனிய விழாவாக அன்றய நிகழ்வு அமைந்தது.


%%%%%%%%%%%%%%%%

Saturday, June 10, 2017

லாகஸிஸ்

ROH   ӨȢø ¿ÄÁ¡ì¸ø
-----------------------------------------------------------------------------------------------------

          

          ¿¡ý ¾ü§À¡Ð ¦ÀÕõÀ¡ý¨ÁÂ¡É ÐÂÃÕìÌ ÁÕóÐò §¾÷× ¦ºöÂô ÀÂýÀÎòÐõ  ROH ӨȢø ¿ÄÁ¡ì¸ø¸¨Ç þíÌ À¸¢÷óÐ ¦¸¡ûÇ Å¢ÕõÒ¸¢§Èý. ROH Ó¨È ÀÃÅÄ¡É ÅçÅü¨ÀÔõ º¢Ä    ±¾¢÷ôÒ¸¨ÇÔõ ¦ÀüÈ¢Õó¾¡Öõ, «õӨȢø ÐÂÃ÷ ¿ÄÁ¡¸¢ýÈÉ÷ ±ýÀÐõ «ó¿ÄÁ¡ì¸ø ¿¢Ãó¾¢ÃÁ¡É¾¡¸ «¨Á¸¢È¡Ð ±ýÀÐõ «¨¾ ÀÂýÀÎòЧš÷¸Ç¢ý «ÛÀÅò ¦¾Ç¢×.

          §†¡Á¢§Â¡À¾¢ ÁÕóиû ±ùÅ¡Ú ¯¼Ä¢ø §Å¨Ä ¦ºö¸¢ÈÐ ±ýÀ¾üÌ «È¢Å¢Âø ӨȢø ¿¢åÀ¢ì¸ ¬¾¡Ãõ ²Ðõ þÐŨà þø¨Ä ±ýÀ§¾ ¸ºôÀ¡É ¯ñ¨Á. §†¡Á¢§Â¡À¾¢ ӨȢø          Å£÷ÂôÀÎò¾ôÀð¼ ÁÕóиǢý Å£÷Âò¨¾ §º¡¾¢òÐ «È¢Â×õ ¸ÕÅ¢¸û ²Ðõ þÐŨà ¸ñÎÀ¢Êì¸ôÀ¼Å¢ø¨Ä.  ¬É¡ø §†¡Á¢§Â¡À¾¢ ÁÕóиû ¬îºÃ¢ÂôÀ¼ò¾ì¸ Ũ¸Â¢ø ¿ÄÁ¡ì¸¨Çî ¦ºö¸¢ÈÐ. «¨¾ ±ó¾ §†¡Á¢¦Â¡À¾¢ÂÕõ ÁÚì¸ ÓÊ¡Ð. «¾ü¸¡É ¬¾¡Ãí¸û ÒûǢŢÀÃí¸û º¡÷ó¾§¾ «ýÈ¢ «È¢Å¢Âø ӨȢġɠ      ¿¢åÀ½í¸Ç¢ø ¸¢¨¼À¾¢ø¨Ä. («¾ü¸¡É «È¢Å¢Âø Óý§ÉüÈõ þýÉÓõ ²üÀ¼Å¢ø¨Ä ±ý§È ÜÈÄ¡õ). «ùÅ¢¾Á¡É ´Õ «ÛÌӨȢ§Ä§Â ¿¡õ  ROH ³Ôõ  ¿¡õ ¿ðÒ¼ý «Û¸ §ÅñÎõ. «¾ýãħÁ ¿¡õ "ÓýÓÊ׸ÇüÈ" ӨȢø ÐÂÃ÷ ¬ö¨Å §Áü¦¸¡ûÇ ÓÊÔõ.


þÉ¢ ¿ÁÐ ÐÂÃ÷ ¿ÄÁ¡ì¸ø:

          ÐÂÃ÷: ¦Àñ, ÅÂÐ: 40. ¿¡û:30.03.2010
                 Ó¨ÈÂüÈ Á¡¾Å¢¼¡ö, Á¡¾Å¢¼¡ö ¿¡ð¸Ç¢ø §Á¡ºÁ¡É Å¢üÚ ÅÄ¢. Óи¢ø ÅÄ¢, ¸¡ø À¾í¸Ç¢ø ±ô§À¡Ðõ ÅÄ¢, ¦¾¡¼÷óÐ ¿¢ü¸§Å¡ ¿¼ì¸§Å¡ ÓÊ¡¾ ¿¢¨Ä. þ¾ü¸¢¨¼Â¢ø Àø ÅÄ¢ ¸¡Ã½Á¡¸ ´Õ Àø ÁÕòÐÅâ¼õ ¦ºýȾ¢ø, «Å÷ ¾ÅÈ¡¸ Àø À¢Îí¸¸¢ À¡¾¢Â¢ø Ţ𼾢ɡø ²üÀð¼ ¾¡¨¼ ÅÄ¢. «òмý ¬Ú Á¡¾í¸Ç¡¸ ÓÊ    «¾¢¸Á¡¸ ¦¸¡Î¾ø.

þÉ¢ ÐÂÃÕ¼ý ¯¨Ã¡¼ø:

         

 "¯í¸ÙìÌ ±ýÉ ¦¾¡ó¾¢Ã׸û" ±É ¿¡ý Å¢ÉÅ¢§Éý.
"¿¡ý «ôÀø§Ä¡Å¢Ä¾¡ý ¸¡ðʸ¢ðÎ þÕó§¾ý... ¬É¡Öõ ºÃ¢Â¡ ¬¸§Ä... «ôÒÈõ º¢ò¾¡Å¢Ä ¼¡ì¼÷........ ±õ.Ê. ¦¾Ã¢ÔÁ¡...  «Å÷  ¦¸¡Îò¾Ð¾¡ý þó¾ ¼¡É¢ì (´Õ À¡Ê¨Ä ¸¡ÊÉ¡÷)

"¯í¸ÙìÌ ±ýÉ ¦¾¡ó¾Ã׸û ±ýÚ ¦º¡øÖí¸û"
"¸¡ø ̾¢ ¸¡Ä¢Ä¢ÕóÐ ÓÆí¸¡ø Ũà ÅÄ¢ º¡÷... «ôÒÈõ ÓÐÌôÀì¸òÐÄ ÓÐÌò¾ñÎ ¸¨¼º£ ±ÖõÒÄ ÅÄ¢. «Ð×õ   ¦ÁýºŠ §¿ÃòÐÄ ¦Ã¡õÀ×õ «¾¢¸õ....."

          "±ò¾¨É ¿¡Ç¡ þôÀÊ þÕìÌ?"

          "¸¢ð¼ò¾ð¼ ´Õ ÅÕ„Á¡ º¡÷... ¼¡ì¼÷........(´Õ Ò¸ú¦ÀüÈ Á¸Ç¢÷ ÁÕòÐÅ÷) ¸¢ð¼¾¡ý º¡÷ ¸¡ðʧÉý.... «ôÒÈõ «ôÀø§Ä¡..."

          "§ÅÈ ±ýÉ ¦¾¡ó¾¢Ã׸û....?"

"ÓýÉ¡Ê ±ÉìÌ ¿¢¨È ÓÊ þÕìÌõ º¡÷.  þôÀ À¡Õí¸.±ùÅÇ× Ì¨ÈîºÄ¡ þÕìÌ... ¿¡ÙìÌ ¿¡û ̨Èï͸¢ð§¼ ÅÕÐ º¡÷...!...
¾¢ÉÓõ ¿¢¨È ÓÊ ¦¸¡ðÎÐ..."  «Ð×õ þó¾ô Àø ¼¡ì¼÷¸¢ð¼  §À¡É¾¢§Ä÷óо¡ý º¡÷... ÀøÄ ÒÎí¸§ÃýÛ ¬ÃõÀ¢îÍ.... À¡¾¢Â¢Ä  Å¢ðÎð¼¡÷... «Ð측¸ ¦À¢ý ¸¢øÄ÷ ¿¢¨È º¡ôÀ¢¼§Åñʾ¡¸¢ô §À¡îÍ...«Ðì¸ôÒÈõ¾¡ý  þó¾ ÓÊ ¦¸¡ðξ§Ä....."

          "§Á§Ä...¯í¸¨ÇôÀüÈ¢ ÜÕí¸û"

          ±ÉìÌ ±øÄ¡§Á ºÃ¢Â¡É §¿ÃòÐÄ ¿¼ì¸Éõ º¡÷...        ¸¡¨Ä  墀 ±Øó¾¢Õì¸ÃÐ...º¡ôÒ¼ÃР ±øÄ§Á Өȡ «ó¾ «ó¾         §¿ÃòÐÄ ¿¼óмÉõ..«¾¡ý ¿¡ý ±¾¢÷À¡÷츢ÃÐ...."

      §ÁÖõ  ÐÂÃ÷ ¸¼×û ¿õÀ¢ì¨¸, ¾¢ÉºÃ¢ §¸¡Å¢ÖìÌî ¦ºøÖ¾ø §À¡ýÈÅü¨È ¸¨¼À¢ÊôÀÅ÷.

§¾÷ó¦¾Îì¸ôÀð¼ ÌÈ¢¦Á¡Æ¢¸û:

Boaster Braggart,
Communication expensive
Fear, poverty,
Delusion, wrong has suffered
Religious affection

 §Áü¸ñ¼ ÌÈ¢¦Á¡Æ¢¸Ç¢ý «ÊôÀ¨¼Â¢ø «ÅÕìÌò §¾÷× ¦ºöÂôÀð¼ ÁÕóÐ: Ä¡¸…º¢Š.

          Ä¡¸…º¢Š 30 ¯¼ÉÊ¡¸ «ÅÕìÌ ¦¸¡Îì¸ôÀðÎ, 15        ¿¡ð¸ÙìÌ ¦¾¡¼÷ ÁÕóиÙõ ¦¸¡Îì¸ôÀð¼É.

          þÃñÎ ¿¡ð¸Ç¢ø ¸¡ø À¡¾ÅÄ¢ ÓØ¨Á¸ì ̨ÈóÐŢ𼾡¸ò ¦¾Ã¢Å¢¾¡÷.

          «Îò¾Ó¨È Á¡¾Å¢¼¡öò, ¦¾¡ó¾¢Ã׸û «¾¢¸Á¢øÄ¡Áø ÅÄ¢ ¦À¡ÕòÐì ¦¸¡ûÇìÜÊ «ÇŢɾ¡¸ þÕôÀ¾¡¸×õ... ÅÄ¢ «¾¢¸Á¡É¡ø «§Ä¡À¾¢ Á¡ò¾¢¨Ã ÀÂý ÀÎò¾Ä¡Á¡? ±Éì §¸ð¼¾¢üÌ ±ó¾ ºó¾÷Àò¾¢Öõ «§Ä¡À¾¢ §Åñ¼¡õ ±É «È¢×Úò¾ôÀð¼Ð.

          15 ¾¢Éí¸û ÓÊóÐ, " ¦¾¡ó¾¢Ã׸û ²Ðõ þø¨Ä.... Óʦ¸¡ðÎÅÐõ À¡¾¢Â¡¸ì ̨ÈóÐûÐ...." ±ýÚ ¦¾Ã¢Å¢ò¾¡÷.... ¦¾¡¼÷ ÁÕóиû ÁðÎõ 30 ¿¡¼¸ÙìÌ ÅÆí¸ôÀð¼Ð.

          ÐÂÃ÷ þó¿¡û Ũà ¿ÄÓ¼ý ¯ûÇ¡÷.


                         &&&&&&&&&&&&&&&&&&&


Thursday, May 25, 2017

குறிகளின் முழுமை (Totality of Symptoms)
                ஹோமியோபதி மருந்துத் தேர்வில் முக்கியமானது துயரர் ஆய்வு. துயரர் ஆய்வில் துயரர் வெளிப்படுத்தும் ஒட்டு மொத்த மனக்குறிகளின் மூலமே  தக்க மருந்தளித்தால்தான் நலமாக்கல் மென்மையாகவும் விரைவாகவும் நிரந்திரமாகவும் நடைபெறுகிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ROH–முறையில் நாம் நிலைத்து, நீடித்து, நிலையாதிக்கம் செய்கின்ற குறிகளின் தொகுப்பில் சுட்டிக்காட்டப்படும் மருந்தை நாம் தேர்வு செய்வது மிகவும் அவசியமானதாகும். அப்படியில்லாமல் துயரர் வெளிப்படுத்திய நமக்கு மிகவும் பழக்கமான ஒற்றைக் மருந்துக் குறியை நாம் விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு மருந்தளித்தால், அது துயரரின் குறிகளின் முழுமையை சுட்டாத போது நலமாக்கல் பகுதியாகவோ, நலமாக்கல் இன்மையோதான் நடைபெறுகிறது என்பது எனது சமீபத்திய அனுபவம்.
            சமீபத்தில் உறவினர் ஒருவரின் திருமணவிழாவிற்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். வெளியில் செல்லும்போது நான் எப்போதும் ஹோமியோபதி மருந்துகள் அடங்கிய சிறிய பெட்டி ஒன்றை எடுத்துச் செல்வது வழக்கம்.
            அத்திருமண விழாவில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண்மணி மூட்டு வலியால் அவதிப்படுவதாக் என் மனைவீயால் அறிமுகப்படுத்தப்பட்டார். அவரிடம் பேசியபோது:-
            ”ரெண்டு மூனு மாசமா இரெண்டு கால் மூட்டிலேயும் வலி....”
            ”ம்.. சொல்லுங்க....”
            ”நடக்கும்போது மரமரன்னு சப்தம் கேட்குது....உட்கார்ந்தா எழுந்திருக்க முடியல.... உள்ள எலும்புக்குள்ள வலிச்சுகிட்டே இருக்கு...’
            ”அப்படியா...?
            ”ரெண்டு முட்டியும் அப்படியே வீங்கி இருக்கிறது மாதிரி தோனுது....”
ஆனால் அவரது கால் முட்டியில் வீக்கம் ஏதும் இல்லை...கிடைத்தது குறிமொழி என்று(!) உற்சாகமானேன். எனது மருந்துப் பெட்டியில் அகோனைட் மருந்து நிச்சயம் இருக்கும்,. எனவே Delusions, body parts are deformed என்ற குறிமொழியில் உள்ள ஒரே மருந்தான Aconite-ல்  30 வீரியத்தில் ஒரு வேளையும் மூன்று நாட்களுக்கு தொடர் மருந்துகளும் கொடுத்தேன்.
            இங்கு துயரர் வெளிபடுத்திய மற்றக் குறிகளான 1. Anger, contradiction form.
  2. Fear of Sufferings  3. Delusions, injured, is being போன்ற குறிகள் வசதியாக மறக்கப்பட்டன.
            மருந்து கொடுத்த சில நிமிடங்கள் கழித்து, அப்பெண்மணி, வீங்கினாமாதிரி இருந்தது இப்ப இல்ல.. .. ஆனா வலி இருந்துகிட்டே இருக்கு…” என்றார். “ தொடர்ந்து மருந்து சாப்பிடுங்க .. வலியும் சரியாயிடும்…..” என்ற பதில் கூறி எனது கைப்பேசி எண்னைக் கொடுத்து வந்தேன்.
            நான் எதிர்பாராத வகையில் அந்தத் துயரரிடமிருந்து மூன்று நாட்கள் கழித்து அழைப்பு வந்தது.  “ வலி அப்படியேதான் இருக்குவலிச்சுகிட்டே இருக்கு….கொஞ்சம் கூட குறையவில்லைஉட்கார்ந்தா எழுந்திருக்க முடியவில்லைநடக்கும்போதுமரமரன்னுசப்பதம் மூட்டிலிருத்து வருது….” என்றார்கூரியரில் வேறு மருந்து அனுப்புவதாகக் கூறி, சிந்தனையில் ஆழ்ந்தேன்.
            துயரர் அப்போது கூறியவற்றையும் தற்போது கூறியவற்றையும் மீண்டும் நினைவு கூர்ந்தேன்.
1. Anger, contradiction form.
                  2. Fear of Sufferings 
                 3. Delusions, injured, is being போன்ற குறிகள் அப்படியே இருந்தன.
அவசரப்பட்டு Delusions, body parts are deformed என்ற குறியின் அடிப்படையில் மருந்து தேர்வு செய்து கொடுத்த்து பகுதியாக  அம்மனநிலையை மட்டுமே மாற்றியிருக்கிறது. துயரை முழுமையாகக் குணப்படுத்தவில்லை என்பது புலனாகிறது.
            எனவே மேற்கண்ட மூன்று குறிமொழிகளே இங்கு PPP ஆக நிலைத்துள்ளது. மேலும் அவரிடம் Carried, desire to be என்ற மனநிலையும் காணப்பட்டதால் அந்த நான்கு குறிமொழிகளையும் உள்ளடக்கிய Bryonia வில் 30ல் ஒரு வேளைக்கும் தொடர் மருந்துகள் 15 நாட்களுக்கும் அனுப்ப்பட்டன.
            நான்கு நாட்களுக்குபின் தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட அப்பெண்மணி வலி பெருமளவில் குறைந்திருப்பதாக்க் கூறினார். துயரர் தற்போது தொடர் கண்காணிபில் உள்ளார்.

            எனவே எம்முறையை அனுசரித்து மருந்தளித்தாலும் (Classical or ROH)   துயர்க் குறிகளின் முழுமையை (Totality of Symptoms) அனுசரித்துக் கொடுக்கும் மருந்தே பூரண நலனை ஏற்படுத்துகிறது என்பதே மேற்கண்ட அனுபவம் உணர்த்துகிறது.

^^^^^%%%%%%%%%%%%%^^^^^

Saturday, April 22, 2017

ஹோமியோபதியும் அறிவியலும்

     ஹோமியோபதி அறிவியலாகுமா…..? என்ற வினா அவ்வப்போது எழுப்பப்படுவதுண்டு. அது மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுக்கும்.. ஹோமியோபதியர் ஹோமியோபதிக்கு ஆதரவாகவும், அறிவியலார் எனக் கூறிக்கொள்பவர் சிலர் ஹோமியோபதிக்கு எதிர்ப்பாகவும் கருத்துகளை பதிவு செய்வர். அத்தோடு அச்சர்ச்சை அடங்க்கிவிடும். இது ஹானிமன் அவர்கள் ஹோமியோபதியை ஒரு மருத்துவ முறையாக அறிவித்த நாள் முதல் நடைமுறையில் உள்ளது.

     இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் ஹோமியோபதி மருந்துகளின் ஆற்றலைக் கணக்கிடும் கருவி ஒன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை. அப்படி கண்டுபிடிக்கப்பட்ட செய்திக்ளும், ஏதோ ’பறக்கும் தட்டு பூமியில் இறங்கியது போன்ற’ ஒரு ஆதாரமற்ற செய்திகளாகவே உள்ளன. பரவலாக நடைமுறைக்கு வந்தபாடில்லை.

     இருந்தபோதிலும் ஹோமியோபதியயை அறிவியலுடன் தொடர்புபடுத்துத்தும் ஆய்வுகள் அங்கங்கே மேற்கொள்ளப்பட்டே வருகின்றன. அவ்வகையில் ஹோமியோபதியை நவீன அறிவியல் முறையான நானோ தொழிற்நுட்பத்துடன் தொடர்புபடுத்தி வரும் பதிவுகள் ஹோமியோபதியர்களுக்கு உற்சாகமூட்டுவதாக உள்ளன. ‘               

சமீபத்தில் மும்பை ஐ.ஐ.டி யின் முனைவர்கள் திரு பிராஷாத் சிகர்மே, திரு. ஏ.கே. சுரேஷ், திரு. எஸ்.ஜி. கானே மற்றும் திரு ஜெயேஷ் பாலரே ஆகியோர் செய்த ஆய்வில், அதிக அளவு வீரியப்படுத்தப்பட்ட தாதுக்களில் இருந்து தயாரிக்கப்பட்ட  ஹோமியோபதி மருந்துகளில் ( high potency (highly diluted) homeopathic remedies made from metals) அளவிக்கூடிய அளவில் அம்மருந்துகளின் மூலப்பொருட்களின் தன்மை இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை கண்டறிந்துள்ளனர்.

பொதுவக இதற்கு முன் நம் அறிவியலார் பலரும் அவகேட்ரா விதிப்படி ஹோமியோபதி மருந்துகளில் 12C வீரியங்களுக்கு மேல் உள்ள மருந்துகளில் மூல மருந்தின் மூலக்கூறுகள் ஏதும் இருக்காது என்றே சொல்லி வந்தனர். (Specifically, if the starting material is at one molar concentration (6.023x10e23 molecules per liter), then at about the 12th dilution (12C) there should be no or very nearly no molecules left of the starting material). 200c வீரியப்படுத்தப்பட்ட மருந்தில் மூல மருந்தின் மூலக்கூறுகள் இருக்கவே இருக்காது என்பது அவர்களின் வாதம்.

 ஆனால்  ஐ.ஐ.டி. பேராசிரியர்களின் எலக்ட்ரான் மைக்ராஸ்கோபி (TEM) எலக்ட்ரான் டிஃப்ராக்‌ஷன் மற்றும் அணு செப்ரோகோபி ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மேற்கண்ட அவோகேட்ரா கோட்பாட்டிற்கு முரணாக உயர் வீரிய மருந்துகளிலும் மிக நுண்ணிய மூலமருந்தின் கூறுகள் உள்ளன என்பதும் தெளிவாகிறது.(nanogram quantities of the starting material still present in these ‘high potency’).

ஹோமியோபதி மருந்துகளின் ஆற்றலை, குறிப்பக உயர் வீரிய மருந்துகளின் ஆற்றலை வெளிப்படுத்தும் மேற்கண்ட ஆய்வு ஹோமியோபதி மருத்துவத் துறையில் ஒரு மைல் கல்லாகவே கருதப்படவேண்டும். ஹோமியோபதியை உணரும் அளவிற்கு அறிவியல் தற்போதுதான் வளர்ந்திருக்கிறது என்பதை நாமக்கு உணர்த்துவதாகவே இத்தகைய ஆய்வுகள் உள்ளன.

இருநூற்று ஐம்பது வருடங்களுக்கு முன், எவ்வித அறிவியல் முன்னேற்றமும் காணாத காலத்தில்  கண்டறியப்பட்ட ஒரு மருத்துவ முறை தற்போதய நவீன அறிவியலால் நிரூபிக்கப்படுகிறது. இதன் மூலமே ஹோமியோபதியைக் கண்டறிந்த மாமேதை. ஹானிமனின் அறிவுக்கூர்மையையும், தீர்க்க தரிசனத்தையும் நாம் வியக்கலாம்.
அறிவியல் காலங்காலமாக மறிக்கொண்டே வருகிறது. முன்பு சொல்லப்பட்ட கோட்பாடுகள் அடுத்தடுத்து வரும் அறிவியலர்களால் கேள்விகுள்ளாக்கப்படுகிறது. ஆனால் ஹோமியோபதி என்றும் மாறாத கோட்பாடுகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்தும் பல புதிய தொழிற் நுட்பங்களினால் ஹோமியோபதி மீண்டும் மீண்டும் நிருபிக்கப்டும் என்பதே உண்மை.

மாமேதை ஹானிமன் பிறந்த இம்மாதத்தில் (ஏப்ரல் 10) ஹானிமன் அவர்களின் கொள்கைக்கு அணி சேர்க்கும் இக்கட்டுரையை ஞானமருத்தும் இதழின் மூலம் வெளியிடப்படுவதில் பெருமை கொள்கிறேன்.

”காலங்கள் மாறும்,
காட்சிகள் மறும்,
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்..!”

            -- கவிஞர் உமர்கையம்.

 நம்பிக்கையுடன் ஹோமியோபதி பணியாற்றுவோம். உலகை நல் வழிப்படுத்துவோம்.